இலங்கைசெய்திகள்

சீனத் தூதுவரின் வருகைக்காக வவுனியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

Reinforced security in Vavuniya

சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15) யாழ்பாணத்திற்கு விஐயம் செய்வதையடுத்து அவரது வருகைக்காக வவுனியாவில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சீனாவின் தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று வடக்கிற்கு விஐயம் செய்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர் அங்கிருந்து யாழ்நோக்கி பயணமானார்.

அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button