இலங்கைசெய்திகள்

மின்வெட்டு- நாடாளுமன்ற லிப்ட்டில் சிக்கிய எம்.பிக்கள்!!

lift

நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், ஏறக்குறைய 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோரே மின்தூக்கியில் சிக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று மின் துண்டிக்கப்பட்ட போது நாடாளுமன்ற வளாகத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதுடன், இதன்போது மின்தூக்கி சேவையும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலிடம் வினவியபோது, ​​தாமும் எல்லாவல எம்.பியும் சுமார் 20 நிமிடம் மின்தூக்கியில் சிக்கி கடும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்ததாகவும் பாரிய உயிர் ஆபத்தை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button