![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG_2322.jpg?resize=708%2C531&ssl=1)
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பாரிய இரும்பு துண்டு இன்று (23) அதிகாலை முதல் காணப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG_2320.jpg?resize=708%2C531&ssl=1)
குறித்து இரும்பு துண்டானது பாலம் அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட போது பார ஊர்தியில் இருந்து வீழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG_2326.jpg?resize=708%2C531&ssl=1)
பேரூந்து நிலையத்தில் இருந்து பேரூந்துகள் வெளியேறும் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த இரும்பு துண்டு காணப்படுவதால் பேருந்துகள் வெளிச்செல்வதிலும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பேரூந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG_2327.jpg?resize=708%2C531&ssl=1)