இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பேருந்து கவிழ்ந்ததில் ஆறு பேர் படுகாயம்

குருணாகலில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சேருநுவர பொலிஸ்பிரிவிட்குட்பட்ட பகுதியிலே விபத்துச்சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் குருணாகலைச் சேர்ந்த மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button