![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6282168f99fd4.jpeg?resize=600%2C400&ssl=1)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமான மே – 18 முன்னிட்டு வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவணி இரண்டாவது நாளாக இன்று திருகோணமலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய நடைபவணியில், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் மதகுருமார்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6282168feab6f.jpeg?resize=600%2C400&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6282168fc325c.jpeg?resize=600%2C400&ssl=1)