![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/1627450535-Hareen-2.jpg?resize=650%2C433&ssl=1)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை குறைக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ஒருவருட சம்பளத்தை கைவிட்டுள்ளார்.
நேற்று (06) நாடாளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ஒருவருட சம்பளத்தை கைவிடுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (07) தனது ஒருவருட சம்பளத்தை உத்தியோகபூர்வமாக கைவிடுவதற்கான கடிதம் ஒன்றை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்தார்.