இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரும் கையெழுத்துப் போராட்டம் வவுனியாவில் முன்னெடுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக தடை செய்யக்கோரி நாடு பூராகவும் இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

அவ்வகையில், இன்று (28) பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரும் கையெழுத்துப்போராட்டம் வவுனியா பழைய பேருந்துநிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இவ் கையெழுத்துப் போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button