இலங்கைசமீபத்திய செய்திகள்

நவாலியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் அதிகளவான வெடிபொருட்கள் இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனியாருக்குச் சொந்தமான காணியினை துப்பரவு செய்யும் போது நிலத்தில் பெட்டிகளில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகளவான வெடிபொருட்கள் காணப்பட்ட நிலையில், பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button