இலங்கைசெய்திகள்

விபத்தில் தாயும் மகளும் பலி

அநுராதபுரத்தில் இன்று (02) இடம்பெற்ற வீதிவிபத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளளனர்.

தம்புளையில் இருந்து அநுராதபுரம் நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டையிழந்து கவரக்குளம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்ததிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தாயும் , மகளும் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தந்தையும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக கவரக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button