இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் நினேவேந்தலுக்கு செல்வதற்கு பஸ் ஒழுங்குகள் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமான எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்திற்கு செல்வதற்கு கிளிநொச்சியில் இருந்து பஸ் ஒழுங்குகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

01.காலை 8.00 மணிக்கு முழங்காவிலில் இருந்து புறப்படும் பேருந்து வாடியடி, பரந்தன் ஊடாகவும்

02.காலை 8.30 மணிக்கு, பளை நகரில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச அலுவலகத்திலிருந்து புறப்படும் பேருந்து புதுக்காடு, இயக்கச்சி, பரந்தன் ஊடாகவும்

 03.காலை 9.00 மணிக்கு பரந்தன் சந்தியிலிருந்து புறப்படும் பேருந்து முரசுமோட்டை, கண்டாவளை, புன்னைநீராவி ஊடாகவும்

04.காலை 9.00 மணிக்கு வட்டக்கச்சி சந்தையடியிலிருந்து புறப்படும் பேருந்து புளியம்பொக்கணைச் சந்தி ஊடாகவும்

05.காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள, தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து புறப்படும் பேருந்து கரடிப்போக்கு, பரந்தன் ஊடாகவும்

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவுற்றதும் அதே வழித்தடத்தின் ஊடாக மீளத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button