இலங்கைசெய்திகள்

சிரித்துக்கொண்டு படுகொலைசெய்ய கோட்டாவால் மட்டுமே முடியும் அநுர எம்.பி காட்டம்

சிரித்துக்கொண்டு மனித படுகொலை செய்ய கோட்டபாயவால் மட்டுமே முடியுமென நாடாளுமன்ற உறுப்பினரும்,ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் காட்டமாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒருவேளை உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள் பற்றி இந்த அரசாங்கத்திற்கு ஒரு கவலையும் இல்லை. மாறாக உணவுக்காகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்துகின்றனர்.

உணவின்றி பட்டினியால் தவிக்கும் மக்களின் வேதனையே போராட்டமாக வெடித்துள்ளது. அவர்களது கோபமும் நியாயமானது. இன்று பிரச்சனைதீருமா? நாளை பிரச்சனை தீருமா? என்றே மக்கள் சிந்தித்து வருகின்றனர்.

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதையும், அராஜங்கள் மேற்க்கொள்வதையும் அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பினரும் உடன் நிறுத்தவேண்டும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button