இலங்கைசெய்திகள்

இரவு வேளைகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த கும்பல் சிக்கியது

யாழில் இரவுவேளைகளில் வீடு புகுந்து ஆயுதமுனையில் அச்சுறுத்தி தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் மாட்டிக் கொண்டது.

பொலிஸாருக்கு டிமிக்கி காட்டி வந்த குறித்த கும்பல் குற்றத்தடுப்பிரிவினரின் வலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடு புகுந்து வாளால் அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குறித்த கும்பல் அதன் தொடர்ச்சியாக நல்லூர், கல்வியங்காடு என தமது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

பல பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸாருக்கு டிமிக்கி காட்டி வந்த கும்பல் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் வசமாக சிக்கியது.

இக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button