இலங்கைசெய்திகள்

பூநகரியில் விபத்து பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி மற்றையவர் படுகாயம்

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரான கல்முனையைச் சேர்ந்த ஆர்.லிகிதன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில், பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button