இலங்கைசெய்திகள்

வவுனியாவில் இளைஞனைக் காணவில்லை பொலிஸில் முறைப்பாடு

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கஜேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றில் (01) இருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றையதினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 077 169 1244‬, ‪ 0779302469 என்ற தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button