இலங்கைசமீபத்திய செய்திகள்
தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வேலணையில் நினைவேந்தல்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220518-WA0205-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று (18)
காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , பிலிப் பிரான்சிஸ் , அ.மேரி மற்றில்டா , சு .பிரகலாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220518-WA0207-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220518-WA0203-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220518-WA0204-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)