இலங்கைசமீபத்திய செய்திகள்

பொலிஸ் என்றால் கொம்பா? என்று முரண்பட்டவர் மீண்டும் பொலிஸாருக்கு சவால்

தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பொலிஸாருக்கு சவாலாக ஒரு விடயத்தை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ” ஸ்ரீ லங்கா பொலிஸாரே , நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.இப்போது என்ன செய்வது ?” என்று இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் தற்போது இருக்கும் இடம் அவுஸ்ரேலியா என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விமானம் ஊடாக அவர் அவுஸ்ரேலியா செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. படகுமூலம் அவுஸ்ரேலியா சென்றரா? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாருடன் முரண்பட்டமை தொடர்பில் கைதுசெய்வதற்காக அவர் தேடப்பட்டு வருகின்ற குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button