இலங்கைசெய்திகள்

நாட்டைப்பாதுகாக்கவே அமைச்சுப் பதவி ஏற்றேன் – ஹரின்

பிரதமர் ரணிலுடன் ஒன்றாக இணைந்து பயணிப்பதற்காக அமைச்சுப் பதவியை ஏற்கவில்லையெனவும் நாட்டைப் காப்பாற்றவே அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானும், ரணிலும் ஒரே படகில் தற்போது பயணித்தாலும், புயலில் சிக்கியுள்ள படகை கரைக்கு கொண்டுவருவதே எனது நோக்கமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஒருபோதும் விலகிக்கொள்ளப் போவதில்லை. ஐக்கியமக்கள் சக்தி என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

கோட்டபாயர ராஜ பக்ச பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒருதுளிகூட பின்வாங்கப் போவதில்லை என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button