இலங்கைசெய்திகள்

அமைச்சர் ஒருவரினால் மின்சாரசபைக்கு பாரிய நட்டம்

அமைச்சர் ஒருவரினால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார நிலுவைக் கட்டணமாக 12 மில்லியன் ரூபா செலுத்தவேண்டுமென இலங்கை மின்சாரசபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ள நிலையிலும் வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button