இலங்கைசமீபத்திய செய்திகள்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திணசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (15) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த 47 வயதுடைய திருமதி.கலைமதி செல்லத்துரை என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பட்டா வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button