இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் புறப்பட்டார் ஜனாதிபதி: வழியனுப்பிவைத்த மாலைதீவு சபாநாயகர்

மாலைதீவில் தங்கியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் சவுதிஅரேபிய ஜெட் விமானம் ஒன்றில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்திலேயே அவர் புறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில மணி நேரத்தில் அவர் சிங்கப்பூரில் இறங்குவார் எனவும், (இலங்கை நேரப்படி இன்று மாலை சுமார் 3.30- 4.00 மணியளவில் ) இன்று இரவுக்கள் அவரது இராஜினாமா கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் தங்கிச்செல்வதற்கான ஏற்பாட்டைச்செய்துகொடுத்த அந்த நாட்டின் சபாநாயகர் முகமத் நசீட் விமான நிலையத்துக்கு வருகை தந்து கோட்டாபயவை வழியனுப்பிவைத்தார்.

மாலைதீவின் விசேட பாதுகாப்புப் படை ஒன்றின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவரும், அவரது மனைவி, இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button