இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் கிராமங்களுக்கான பஸ்சேவைகள் நிறுத்தம் – மக்கள் பெரும் அவலம்!!

கிளிநொச்சிப் பகுதியில் சில கிராமங்களுக்கான பஸ்சேவைகள் நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – முக்கொம்பன் மற்றும் செக்காலை, கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதற்கான தீர்வைப்பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button