இலங்கைசெய்திகள்

மலையூர் ஆட்டம் ஆரம்பிக்கின்றது

மட்டக்களப்பு தாந்தமலை ஶ்ரீமுருகன் விளையாட்டுக்கழகம் கழகத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், உயிர்நீத்த உறவுகளின் ஞாபகர்த்தமாக மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது.

இப்போட்டிகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தாந்தமலை ஶ்ரீமுருகன் விளையாட்டு கழக மைதானத்தில் அணிக்கு 9 பேர் கொண்ட போட்டிகளாக இடம்பெறவுள்ளது.

போட்டியில் பங்கு பெறவிரும்பும் கழகங்கள் 076 857 5938, 076 857 1191, 076 968 0761 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்போட்டிகளுக்கு எமது ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையத்தளம் ஊடக அணுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button