இலங்கைசெய்திகள்

கோரவிபத்து மூவர் பலி

பொலன்நறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் மன்னப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் அரலகங்வில அருணபுர பிரதேசத்தை 67 வயதுடைய யு.டப்ளியூ.ஜீ.ரண்பண்டா, 62 வயதுடைய அவரது மனைவி ஜீ.கே. நந்தவதி மற்றும் இவர்களின் உறவினரான 72 வயதுடைய டி.ஜீ.விமலா
ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button