இலங்கைசெய்திகள்

காதலனுக்கு அனுப்பிய அந்தரங்க படத்தினால் மாணவிக்கு வந்த வினை

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு அவரின் அந்தரங்க படத்தைக்காட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த இருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவியும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலில் வயப்பட்ட குறித்தமாணவி தனது அந்தரப்படங்களை காதலனுக்கு அனுப்பிவந்துள்ளார்.

இருவருடைய காதலும் முறிவடைந்த நிலையில் இளைஞன் குறித்த மாணவியின் அந்தரப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அப்படங்களை காண்பித்தே இரு இளைஞர்களும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில், மாணவியால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button