![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/nwg_image_2429.jpg?resize=520%2C337&ssl=1)
“நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவோ பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.” என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னால் இன்னும் கிராமத்துக்குச் செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகின்றேன்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம் என்றார்.