இலங்கைசெய்திகள்

மக்களை கண்டு ஒழிக்கும் அமைச்சர்கள் – வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய மகிந்த அமரவீர

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கமநல சேவைகள், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர பின்கதவால் தப்பிச்சென்றுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவடத்தின் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மகிந்த அமரவீரவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், கலந்துரையாடல் இடம்பெற்ற பிரதேசசெலயகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அகில இலங்கை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அமைச்சருக்கு எதிராக கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அச்சமடைந்த அமைச்சர் தனது உத்தியோக பூர்வ வாகனத்தை விட்டுவிட்டு பிரதேசசெயலகத்தின் வாகனம் ஒன்றில் ஏறி பின்கதவால் சென்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button