![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/IMG_20220308_102309.jpg?resize=510%2C698&ssl=1)
வவுனியா பனையாண்டான் என்னும் கிராமத்தில் உள்ள வீடொன்றில் வழமைக்கு மாறாக பசுமாடு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
பொதுவாக பசுமாடு ஒரு குட்டியை ஈனுவது வழமையான விடயமாகும். சில சந்தர்ப்பங்களில் இரண்டு குட்டிகளை ஈனும் சந்தர்ப்பங்களும் உண்டு.
இந்நிலையில், மூன்று குட்டிகளை ஈன்றுள்ளமை அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பலர் நேரடியாகச் சென்று பார்வையிட்டும் வருகின்றனர்.