![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Screenshot_20220220_133207-1024x519.jpg?resize=708%2C359&ssl=1)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (20) கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் இப்போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இப்போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பித்து டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.