இலங்கைசெய்திகள்

மாமா என்னை விட்டுவிடுங்கள் என கத்திய ஆயிஷா – கொலையாளி வாக்கு மூலம்

சிறுமியை கை, கால்களை கட்டி சதுப்பு நிலத்தில் அமிழ்த்தி கொலை செய்தேன் என கொலையாளி விசாரணையின் போது ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பண்டாரகம, அட்டலுகம பகுதியில் 9 வயது சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட கொலையாளி கைதுசெய்யப்பட்டு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

“பாலியல் இச்சைக்காகவே சிறுமியை பற்றைப்பகுதிக்கு இழுத்துச்சென்றேன். சிறுமி தப்பிக்க முயற்சித்தார். மாமா என்னை விட்டுவிடுங்கள் என்று கத்தினார். ஊருக்குள் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் எனது சாரம், சேட்டைகிழித்து கால், கையை கட்டிப்போட்டு சதுப்பு நிலத்தில் அமிழ்த்தி கொலை செய்தேன்” என கொலையாளி குற்ற வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி 28 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் போதே கொலையாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button