இலங்கைசெய்திகள்

கோட்டபாயவிற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நாட்டில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை மேற்க்கொண்டு வரும் நிலையில், இன்று (08) கோட்டபாய அரசிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான போராட்டங்கள், ஜனாதிபதி இல்லம் முற்றுகை, பிரதமர் இல்லம் முற்றுகை, நாளுமன்றம் முற்றுகை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் முற்றுகை எனப் மக்கள் எழுச்சிப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டபாய அரசுக்கு ஆதரவாக இன்று போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எமக்கு வேண்டும் கோட்டா எனவும் போரை வென்ற கோட்டா எனவும் நாட்டை முன்னேற்ற போகும் கோட்டா போன்ற கோஷ்ங்களை எழுப்பினர்.

அரசுக்கு எதிராகப் போராடும் மக்களால் “கோட்டா கோ” என்ற வாசகம் எழுச்சி பெற்றிருந்தது. கோட்டபாய அரசுக்கு போராட்டம் மேற்க்கொண்டவர்கள் ” எங்களுக்கு கோட்டா வேணும்” என்ற கோசத்தை எழுப்பியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button