இலங்கைசெய்திகள்

16 வயது சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் மீது நடத்திய கத்திக் குத்து!!

srilanka

நேற்று முன்தினம் காலி போத்தல, காசிதெனிய பிரதேசத்தில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதான சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் அவரைக் கத்தியால் குத்தி விட்டுத்தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ( 45 வயது) பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர், கத்தியால் குத்திய 16 வயதான சிறுமியின் தாயாருடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க சிறுமி ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது, வாக்குவாதம் முற்றியதில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து போத்தல காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button