![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/5-6.jpg?resize=708%2C354&ssl=1)
பணத்திற்கு ஆசைப்பட்டு ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு Jawzian மாகாணத்தை சேர்ந்த ஒருவர் 130 பெண்களை ஏமாற்றி விற்றுள்ளார். அதிலும் அவர் ஏழை பெண்களை குறிவைத்து அவர்களிடம் சென்று ‘உங்களை நான் பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வருகிறேன்’ என்று ஆசை வார்த்தைகளை கூறி பலருக்கு அடிமையாக விற்றுள்ளார்.
இந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை நிலைமை உயரப் போகிறது என்றும் சூழ்நிலைகள் மாறப்போகிறது என்றும் ஆசைப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 130 பெண்களை கடத்தி சென்று விற்பனை செய்துள்ள அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு பயங்கரமான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெறுகிறது.