இலங்கைசெய்திகள்

யாழில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக்கொலை கொலையாளி தலைமறைவு

யாழில் வேலைக்கு வந்த இளைஞனால் 72 வயதுடைய மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராசாவின் தோட்ட வீதி பகுதிலேயே இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது.

இவ் கொலைச்சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா என்ற மூதாட்டியே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், தப்பியோடிய கொலையாளியை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button