இந்தியாசெய்திகள்

உரும்பிராயில் ஒரே நேரத்தில் இரண்டு விபத்து மூவர் காயம்

உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் காயமடைந்ந நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (10) உரும்பிராய் சந்தியில் பதிவாகியுள்ளது.

பலாலி வீதிப்பக்கமாக இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மருதனார்மடப் பகுதியில் இருந்து வந்த இராணுவ கடற்படை வாகனமும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் காயமடைந்தனர்.

அத்துடன், காயமடைந்தவர்களை பாதுகாப்புக் கடமையில் நின்ற இராணுவவீரர் பார்க்கச் சென்றபோது பின்னால் வந்த கார் அவரை மோதித்தள்ளியது.

இந்நிலையில், இவ் விபத்துச்சம்பவங்களில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும், இராணுவவீரரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button