இலங்கைசெய்திகள்

மஹிந்தவின் வருகையை எதிர்க்க வந்த மக்களின் பஸ்களை நடுவீதியில் மறித்து பொலிஸார் அடவடித்தனம் மக்கள் வீதியில் படுத்துப் போராட்டம்

இரண்டு நாள் விஜயம் மேற்க்கொண்டு யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பிரதமர் மஹிந்த இன்று (20) மட்டுவிலில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்துவைக்கவுள்ளார்.
இந்நிலையில், மஹிந்தவின் யாழ்.வருகையைக் கண்டித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மஹிந்தவின் வருகையைக் கண்டித்து மட்டுவில் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அவ்வகையில் அப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முல்லைத்தீவில் இருந்து வருகைதந்த காணமல் ஆக்கப்பட்டவர்களின் பேருந்து மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் பொலிஸரால் மறிக்கப்பட்டு பஸ்ஸின் இரண்டு கதவுகளும் பொலிஸரால் மூடப்பட்ட நிலையில், மக்கள் எவரும் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை.

எப்படியிருப்பினும், மக்கள் கீழே இறங்கி வீதியில் படுத்துக்கிடந்து, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பெரும் பதற்தமான சூழ்நிலை நிலவி வருவதுடன், ஏரளமான பொலீஸார், இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button