இலங்கைசெய்திகள்

நிறைவேறறு அதிகாரம் நீக்கப்படால் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத் தயார் சஜித் பகிரங்க அறிவிப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றுமுழுதாக நீக்கப்பட்டால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை நீக்க நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத் தயாராகவுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று (08) சற்றுமுன் பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் யோசனைகளை முன்வைத்து, எதிர்க் கட்சி தலைவர் சபையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டு மக்கள் மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் இந்த பாதிப்பிலிருந்து அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button