இலங்கைசெய்திகள்

சஜித்தின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவால் பிரதமர் பதவியை ஏற்கத்தயார் என இன்று மதியம் கடிதம் மூலம் அனுப்பப்பட்ட கோரிககையை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாட்களாக பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் பதவியை ஏற்பதற்கு எவரும் வரவில்லை. இந்நிலையில் ரணில் அதற்கு சம்மதித்துள்ளார். அவருக்கு கொடுத்த வாக்குறுதியை மீற முடியாது என ஜனாதிபதி கோட்டபாய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபித்து பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சஜித்திற்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button