இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸார் கர்ப்பினித்தாய், மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்

கிளிநொச்சியில் கர்ப்பினித்தாய் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞன் மீது தாக்குதல் மேற்க்கொண்ட பொலிஸார் மீது மக்கள் தாக்குதலை மேற்க்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (09) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றது. அப்பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கசிப்பு உள்ளதாக தெரிவித்து வீட்டில் வேலை செய்த இளைஞனை கைது செய்தனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. இதனையடுத்து பொலிஸார் வீட்டிலிருந்த கர்ப்பினிப்பெண் மற்றும் மாற்றுத்திறனாளி மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞரின் தாயார் ஆகியோர் மீதும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button