இலங்கைசெய்திகள்

வடக்கின் போரில் சம்பியனாகியது சென்ஜோன்ஸ்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்தியகல்லூரி மற்றும் யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் மூன்றாவது நாளும், இறுதி நாளுமான இன்றைய தினம் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.

அதன்படி, நேற்றைய ஆட்டத்தின் தொடர்ச்சியாக யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சென்ஜோன்ஸ் அணி மேலதிகமாக 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் டிக்கிளே செய்து மத்தியகல்லூரியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதனடிப்படையில் யாழ்.மத்தியகல்லூரி 169 ஓட்டங்களைப் பெற்று சகல இலக்குகளையும் இழந்து 98 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

கொரோனாத் தொற்றுக்காரணமாக கடந்த வருடம் போட்டி இடம்பெறவில்லை எனினும், அதற்கு முதல் வருடத்தில் இடம்பெற்ற போட்டியிலும் யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button