இலங்கைவிளையாட்டு

தலைவர் கிண்ணம் பாடுமீன் அணி வசமாகியது கிண்ணம்

தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டது.

யாழ்.லீக்கினால் நடத்தப்பட்டு வந்த தலைவர்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று (10) யாழ்.லீக் தலைவர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் மாலை 3.30 மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட திடலில் இடம்பெற்றது.

இவ் இறுதிப்போட்டியில் யாழ்.மாவட்டத்தில் பலம் பொருந்திய அணிகளான குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகமும் நாவந்துறை சென்நீக்கிலஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் பாடுமீன் அணி வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. பாடுமீன் அணியின் நட்சத்திர வீரர் சாந்தன் அணிக்காக கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button