இலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுக்கு இடையில் குடும்பிச் சண்டை

யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாடகைக்கு அறையில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் நேற்று (06) சிறிய மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவைச் சேர்ந்த மாணவி ஒருவரும், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருமே தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், கலைப்பீட மாணவி அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவதால் தனது கற்றலுக்கு இடையூறாக இருப்பதாக மருத்துவபீட மாணவி பல தடவைகள் சொல்லிக்காட்டியுள்ளார்.

நேற்று இரவும் கலைப்பீட மாணவி அதிக நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது மருத்துவபீட மாணவி இரண்டு, மூன்று தடவைகள் தனது கற்றலுக்கு இடையூறாக இருப்பதாக சுட்டிக்காட்டிய போதும், கலைப்பீட மாணவி அதனைப் பொருட்படுத்தவில்லை.

கோபமடைந்த மருத்துவபீட மாணவி தன்னுடைய தொலைபேசியை கலைப்பீட மாணவியின் முகத்தில் எறிந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் நண்பர்களின் தலையீட்டால் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button