இலங்கைசமீபத்திய செய்திகள்

ஞானகலா அபாரம்
மாஸ் காட்டியது இருதயராஜா

வடமாகண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (13) போட்டிகளில் ஞானகலா மற்றும் இருதயராஜா வி.கழகங்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதலாவது போட்டியில் குப்பிளான் ஞானகலா வி.கழத்தை எதிர்த்து தீவகம் திருவள்ளுவர் வி.கழகம் மோதியது. இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3:2 என்ற கோல் கணககில் ஞானகலா வி.கழகம் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் அராலி சில்வெஸ்ரார் வி.கழத்தை எதிர்த்து மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.கழகம் மோதியது. 6:1 என்ற கோல் கணக்கில் இருதயராஜா வி.கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

வடக்கின் சமரில் நாளை, தீவகம் இருதய ஆண்டவர் ஐக்கிய வி.கழகத்தை எதிர்த்து உரும்பிராய் சென்மைக்கல் வி.கழகம் களமாடவுள்ளது.

இரண்டாவது போட்டியில் திருநெல்வேலி மகாத்மாஜி வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி கருணாகரன் வி.கழகம் மோதவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button