செய்திகள்விளையாட்டு

வடக்கின் சமர் பிரமாண்டமாக ஆரம்பமாகியது

ஊரெமு றோயல் விளையாட்டு கழகத்தால் நடத்தப்படும் “வடக்கின் சமர்” உதைபந்தாட்ட போட்டிகள் இன்று (07) கோலாகலமாக ஆரம்பமாகின.

ஆரம்ப நிகழ்வுகளாக விருந்தினர்களை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து முதலாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் வி.கழத்தை எதிர்த்து மகாத்மா அணி மோதியது. இப் போட்டியில் 3:2 என்ற கோல் கணக்கில் மயிலங்காடு ஞானமுருகன் வி.க வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் மல்லாகம்,நியூ வாரியர்ஸ் அணி போட்டிக்கு சமூகமளிக்காமையால் குருநகர் பாடுமீன் வி.கழகத்திற்கு வெற்றி வழங்கப்பட்டது.

வடக்கின் சமர் தொடரின் நாளைய போட்டிகளாக புத்தூர் வீனஸ் வி.கழகத்தை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.கழகம் மோதவுள்ளது.

நாளைய இரண்டாவது போட்டியில் அரியாலை ஐக்கிய வி.கழகத்தை எதிர்த்து உரும்பிராய் உதயசூரியன் வி.கழகம் மோதவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button