இலங்கைசமீபத்திய செய்திகள்

பல வருடங்களின் பின்னர் பிறந்த மண்ணில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழர்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் நினைவு தினம் இவ்வருடம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தியாக தீபம் திலீபன் உயிர் நீத்த இறுதி நாளான 25 ஆம் திகதி நினைவேந்தல்ளை எழுச்சியுடன் நினைவுகூர்வதற்கு தமிழர் பிரதேசங்கள் தாயராகி வருவதாக திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களின் பின்னர் திலீபனின் பிறந்த ஊரான ஊரெழுப் பிரதேசத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரெழுவில் தியாக தீபம் திலீபனின் வீடு அமைந்திருந்த காணிக்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் திலீபன் ஞாபகார்த்த நினைவேந்தல் ஊர்தி ஊரெழு பிரதேசத்தில் இருந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button