இலங்கைசமீபத்திய செய்திகள்

மாணவி கிருஷாந்தியின் 26வது நினைவு தினம்

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (07) செம்மணியில் அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில், சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிசோர் உட்பல பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button