இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியாவில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஆணின் சடலம் ஒன்று நேற்று (11) இரவு மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பசார் வீதியில் உள்ள நகைகடை ஒன்றுக்கு முன்பாக இறந்த நிலையில், ஆணின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலத்தில் தலை, கால் என்பவற்றின் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button