இலங்கைசெய்திகள்

O/ L பரீட்சை மண்டபத்தில் மாணவியின் மார்பைத் தடவிய மேற்பார்வையாளர் கைது

க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் பரீட்சை நிலையத்தில் வைத்து பாலியல் துஷ்பிரரோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த பயங்கரசம்பவம் அநுராதபுரம் பாடசாலை ஒன்றில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்து.

உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் O/L பரீட்சையில் சித்தியடையாத வரலாற்றுப்பாடத்தில் இவ்வருடம் தோற்றியுள்ளார்.

பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் மாணவிக்கு உதவிசெய்வதாக தெரிவித்து மாணவியின் கன்னத்தில் முத்திமிட்டுள்ளார். அத்துடன் அந்த படித்த கமாப்பிசாசு மாணவியின் மார்பையும் தொட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவி பரீட்சை நிலையத்தின் அதிகாரிகளுக்கு அறிவித்தும் சம்பந்தப்பட்ட கல்விஅதிகாரிகளும் காமப்பிசாசான மேற்பார்வையாளரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த மேற்பார்வையாளர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த நபரை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button