இலங்கைசெய்திகள்

வல்வெட்டித்துறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை பேரணி ஆரம்பம்

வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி இன்று (16) காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு முற்றத்தில் இருந்து ஆரம்பமாகியது.

இப்பேரணியில், வேலன் சுவாமிகள், மதகுருமார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இப்பேரணியானது, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் முகமாக, “இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் பயணம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.

இப்பேரணியானது, முள்ளிவாய்க்கால்; இனப்படுகொலை நினைவு தினமான மே – 18 முள்ளிவாய்க்கலை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button