இலங்கைசெய்திகள்

யாழில் பயங்கரம் – வாள்வெட்டில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(04) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் நின்று கதைத்துக்கொண்டிருந்த வேளையில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட ரவுடிக் கும்பலே வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படடுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button