இலங்கைசெய்திகள்

விருந்துபசார நிகழ்வில் பங்கு கொண்ட இளைஞர் யுவதிகள் கைது!!

arrested

மாத்றை, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் போதைப்பொருளுடன் 12 நபர்களை கைது செய்துள்ளனர்.இந்த விருந்துபசார நிகழ்வு ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமகாராமை மற்றும் கோனபீனுவலை பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் இருந்து கொக்கெய்ன், ஐஸ், கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button